//]]>

Friday, January 26, 2018

முல்லைத்தீவில் பெருமளவு வாக்காளர் அட்டைகள் மீட்பு

உள்ளூராட்சித் தேர்தலுக்கு வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய 288 வாக்காளர் அட்டைகள் முல்லைத்தீவிலுள்ள வீடொன்றிலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு தேராவில் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்தே நேற்று நண்பகல் இந்த வாக்காளர் அட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

வாக்காளர் அட்டைகள் கைப்பற்றப்பட்ட வீட்டின் உரிமையாளரும் அஞ்சல்காரரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்களப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

கைதானவர்கள் முல்லைத்தீவின் விசுவமடு மற்றும் தேராவில் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், புதுக்குடியிருப்புப் பொலிஸார் வாக்காளர் அட்டைகள் மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment