இலங்கையின் புதிய தேர்தல் முறை தொடர்பாக 80 வீதமான வாக்காளர்கள் சரியான தெளிவின்றிக் காணப்படுவதாகத் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பவ்ரல் அமைப்புத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றோகண ஹெட்டியாராய்ச்சி தெரிவிக்கையில்,
புதியதேர்தல் முறை தொடர்பாக நாடு முழுவதும் விளக்கமளிக்கும் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. எனினும், சில வேட்பாளர்கள் கூடப் புதிய தேர்தல் முறை பற்றிய விளக்கமின்றிக் காணப்படுகின்றனர்.
உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்திருத்தம் மற்றும் மீள்திருத்தம் ஆகியன வாக்காளர்களை அதிகளவில் குழப்பியுள்ளது.
தேர்தல் மறுசீரமைப்புகள் தொடர்பாகப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து அரசியல் கட்சிகள் கவனம் செலுத்தவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment