மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(27) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, நாளை காலை-09 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை கிளிநொச்சி மாவட்டத்தின் கெளதாரிமுனைப் பிரதேசத்திலும்,
காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை வவுனியா மாவட்டத்தின் நெடுங்குளம் கிராமம், கோவில்குளம், ஆச்சிபுரம், சமணன் குளம், மகாமயிலங்குளம், மருதநகர், எல்லப்பமருதங்குளம், பெரியகூமரசங்குளம், ஆசிக்குளம், சிதம்பரபுரம் ஆகிய பகுதிகளிலும்,
காலை- 08 மணி முதல் மாலை-05 மணி வரை மன்னார் மாவட்டத்தின் வெள்ளாங்குளம், கணேசபுரம், தேவன்பிட்டி நீர்ப்பாசன சபை, கணேசபுரம் நீர்ப்பாசன சபை ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் கூறியுள்ளார்.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment