//]]>

Friday, January 26, 2018

வடமாகாணத்தில் நாளை மின்தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் சில பகுதிகளில் நாளை சனிக்கிழமை(27) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை காலை-09 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை கிளிநொச்சி மாவட்டத்தின் கெளதாரிமுனைப் பிரதேசத்திலும்,

காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை வவுனியா மாவட்டத்தின் நெடுங்குளம் கிராமம், கோவில்குளம், ஆச்சிபுரம், சமணன் குளம், மகாமயிலங்குளம், மருதநகர், எல்லப்பமருதங்குளம், பெரியகூமரசங்குளம்,  ஆசிக்குளம், சிதம்பரபுரம் ஆகிய பகுதிகளிலும்,

காலை- 08 மணி முதல் மாலை-05 மணி வரை மன்னார் மாவட்டத்தின் வெள்ளாங்குளம், கணேசபுரம், தேவன்பிட்டி நீர்ப்பாசன சபை, கணேசபுரம் நீர்ப்பாசன சபை ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் கூறியுள்ளார். 

(எஸ்.ரவி-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment