புதிய கலப்பு முறையின் கீழ் நடைபெற்ற உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் 25 சதவீதம் பெண் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் இன்றைய(19) கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படுமெனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இம்முறை தேர்தல் முடிவுகள் வழக்கத்துக்கு மாறான வகையில் அமைந்துள்ளமையால் 25 வீத இடங்களை பெண்களுக்கு ஒதுக்குவதில் சட்டரீதியான தடைகள் உள்ளன.
சில சபைகளில் குறிப்பிட்ட அரசியல் கட்சிகள். 20 வீத வாக்குகளையும், மூன்றிற்குக் குறைவான உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றன.இதனால், விகிதாசார அடிப்படையில் பெண் வேட்பாளர்களை நியமிப்பதில் சிக்கல்கள் எழுந்துள்ளன.எனவே, உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.
எனினும், அவ்வாறு திருத்தம் செய்யப்பட்டாலும் கூட அடுத்த தேர்தலில் தான் அது நடைமுறைக்குக் கொண்டு வரப்படும் என்றார்.
0 comments:
Post a Comment