மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தில் வவுனியா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று திங்கட்கிழமை(19) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்படி , இன்று திங்கட்கிழமை காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை வவுனியா மாவட்டத்தின் கோவில்குளம், ஆச்சிபுரம், சமணன் குளம், மகாமயிலங்குளம், மருதநகர், எல்லப்ப மருதங்குளம், பெரிய கூமரசங்குளம், ஆசிக்குளம், சிதம்பரபுரம், கண்ணாட்டி கணேசபுரம், பூந்தோட்டம் ஒருபகுதி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் கூறியுள்ளார்.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment