//]]>

Saturday, February 24, 2018

காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் தொடர்பான சட்டம்: நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு....

காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகம் தொடர்பான சட்டம் எதிர்வரும் மார்ச்-07 ஆம் திகதி இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

ஏற்கனவே, குறித்த சட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுவது இரண்டு தடவைகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் மீண்டும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான முக்கிய விவாதங்கள் இடம்பெறவுள்ள நிலையிலேயே இந்த காணாமல் போனோர் பணியக சட்டத்தை நாடாளுமன்றத்தில் விவாதிக்க சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment