//]]>

Saturday, February 24, 2018

டெல்லி வருமாறு ஜனாதிபதிக்கு நேரில் அழைப்பு(Photo)

இந்தியாவின் புதுடெல்லியில் எதிர்வரும் மார்ச்- 11ஆம் திகதி இடம்பெறவுள்ள அனைத்துலக சூரிய கூட்டமைப்பின் (International Solar Alliance) உருவாக்கக் கூட்டம் மற்றும் சூரிய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரெஞ்ச் அதிபர் இமானுவெல் மக்ரோன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்திய மற்றும் பிரெஞ்சுத் தூதுவர்கள் இணைந்து நேற்று  நேற்றைய தினம்(23) ஜனாதிபதியிடம் நேரில் அழைப்பு விடுத்தனர். மேற்படி அழைப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment