யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அருகில் இன்று திங்கடகிழமை(19) காலை இடம்பெற்ற விபத்தில் கிறிஸ்தவ மதகுரு ஒருவர் காயமடைந்துள்ளார்.
மோட்டார்ச் சைக்கிளும், துவிச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்துச் சம்பவித்துள்ளது.
குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தைச் சேர்ந்த க.அருள்நேசன் என்ற மதகுருவே காயமடைந்தவராவார். காயமடைந்த மதகுரு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகிறார்.
குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
(தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment