//]]>

Monday, February 19, 2018

யாழில் பலரதும் கவனத்தை ஈர்த்துள்ள சுவரொட்டிகள்(Videos)

யாழ். நல்லூர், கந்தர்மடம், திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் 'சிவசேனை' எனும் பெயரில் இன்றைய தினம்(19) பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறித்த சுவரொட்டிகளில் வடமாகாணம் எங்கும் மாடுகள் களவு, மாட்டிறைச்சிக்காகப் பசுக்கொலை! சைவசமயம் பசுக்கொலையை ஏற்பதில்லை...10,000 ஆண்டுகால மரபும், நெறியும் இதுவே. புத்த சமயமும் பசுக்கொலையை ஏற்பதில்லை. மாட்டிறைச்சிக் கடைக்கு உரிமம் வழங்காத உள்ளுராட்சி சபைகளை அமைப்போம். மண்ணின் மரபு காப்போம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த சுவரொட்டியுடன் இணைந்த வகையில் மேலும் ஒரு சுவரொட்டியும் ஒட்டபட்டுள்ளதுடன் சுவரொட்டிகளுக்குக் கீழ் 'சிவசேனை' எனக் குறிப்பிடப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(எஸ்.ரவி-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment