//]]>

Sunday, February 18, 2018

உறங்கிக் கொண்டிருந்த கணவன்- மனைவி மீது சரமாரி துப்பாக்கிச் சூடு:கணவர் பலி

உறங்கிக் கொண்டிருந்த கணவன் - மனைவி மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 51 வயதான கணவர் உயிரிழந்துள்ளார்.

இன்று ஞாயிறுக்கிழமை(18) அதிகாலை தலங்கம தெற்குப் பிரதேசத்தில் வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந்த தம்பதியினர் மீது அடையாளம் தெரியாத இருவரால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மோட்டார்ச் சைக்கிளில் வந்த இருவர் குறித்த வீட்டின் கதவை உடைத்து வீட்டினுள் நுழைந்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் கடும் காயங்களுக்குள்ளான 51 வயதான கணவரும், அவரது 48 வயதான மனைவியும்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்துக் கணவர் பலியாகியுள்ளார்.

மேற்படி துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment