//]]>

Sunday, February 18, 2018

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கான முக்கிய கலந்துரையாடல் நாளை

வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கான முக்கிய கலந்துரையாடலொன்று நாளை திங்கட்கிழமை(19) காலை-09 மணியளவில் யாழ். மாவட்டச் செயலகம் முன்பாக நடைபெறவுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சினால் வழங்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டு விண்ணப்பங்கள் கோரப்பட்ட பயிற்சி அடிப்படையிலான அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்களை விரைவில் பெறுதல் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது. இந்தக் கலந்துரையாடல் நிகழ்வின் ஒரு கட்டமாகக் கடந்த-2017 இல் வெளியேறிய புதிய வேலையற்ற பட்டதாரிகளுக்கான பதிவுகள்  நடைபெறும்.

இந்தக் கலந்துரையாடலில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கமைவாக ஜனாதிபதி, பிரதமரைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

இந்தக் கலந்துரையாடல் முக்கியமான கலந்துரையாடல் ஆகையால் வடமாகாணத்திலுள்ள அனைத்து மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளையும் தவறாது கலந்து கொள்ளுமாறு வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

(எஸ்.ரவி-)


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment