"நவீன ஊடக கலாசாரத்தை நோக்கிய பயணம்" எனும் தலைப்பிலான கலந்துரையாடலும், ஊடகத் துறைசார் ஆர்வலர்களுக்கான வழிகாட்டலும் இன்று ஞாயிற்றுக்கிழமை(18) இல- 125, பிரதான வீதி, தனி நாயகம் அடிகளார் ஆய்வு மைய வளாகத்தில் அமைந்துள்ள குடும்ப மருத்துவ நிறுவனத்தில் இடம்பெறவுள்ளது.
காலை-09 மணியிலிருந்து நண்பகல்-12 மணி வரை கலந்துரையாடலும், நண்பகல்- 12 மணி முதல் பிற்பகல் -03 மணி வரை ஊடகத் துறைசார் ஆர்வலர்களுக்கான வழிகாட்டலும் இடம்பெறும்.
தமிழ் ஊடகத்துறையின் தேவைகளைக் கருத்தில் கொண்டு கலந்துரையாடல் அடிப்படையிலான ஊடக பயணமாக இந்த ஊடகச் செயலமர்வு அமையவுள்ளது.
நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் இலங்கை ஊடகப் பயிற்சி நிறுவனம் என்பன இணைந்து இந்த ஊடகச் செயலமர்வை ஏற்பாடு செய்துள்ளன.
இதேவேளை, இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில் தம்மைப் பதிவு செய்ய விரும்பும் வடமாகாண ஊடகவியலாளர்கள் இந்தச் செயலமர்வின் போது 500 ரூபா செலுத்தித் தமக்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற முடியுமென சங்கத்தின் வடமாகாண இணைப்பாளர் யாழ். தர்மினி பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment