ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அமர்வு ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இலங்கை விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
ஜெனீவாவிலுள்ள பிரித்தானியத் தூதுவரின் பணியகத்தில் நேற்று(16) முக்கிய கூட்டமொன்று நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில் ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளின் பிரதிநிதிகள் என 26 நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 40 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் முக்கிய இடம் வகிக்கும் என்பதால் அது தொடர்பான நகர்வுகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன.
குறிப்பாக உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னரான அரசியல் நகர்வுகள் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளில் ஏற்படக் கூடிய தாக்கங்கள் என்பன தொடர்பில் ஆராயப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தேர்தல் முடிவுகளால் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களைக் காரணம் காட்டி அரசாங்கம் ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்றுவதிலிருந்து பின்வாங்க அனைத்துலகச் சமூகம் இடமளிக்கக் கூடாது எனவும், ஜெனீவா வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறும் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
0 comments:
Post a Comment