//]]>

Sunday, February 18, 2018

பிரதமரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை!

19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கமைய  பிரதமரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என ஜனநாயகத்துக்கான சட்டவாளர்கள் அமைப்புத் தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவி நீக்கம் செய்வது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறவுள்ளதாக ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன கூட்டு எதிரணியினருக்கு உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில் ஜனநாயகத்துக்கான சட்டவாளர்கள் என்ற அமைப்பின் சார்பில் சட்டவாளர்கள் லால் விஜேநாயக்க, கே.எஸ்.இரத்னவேலு,  சுதத் நெத்சிங்க,  பிரபோத ரத்நாயக்க, ஹரின் கோமிஸ் ஆகியோர் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் 19 ஆவது திருத்தத்துக்கு முன்னர் பிரதமரைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கிருந்தது. ஆனால், 19 ஆவது திருத்தச்சட்டத்தின் மூலம் அந்த அதிகாரம் நீக்கப்பட்டுள்ளது,

எனவே, நாடாளுமன்ற வழக்கத்தின்படி நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றைக் கொண்டு வந்து நிறைவேற்றுவதன் மூலமே பிரதமரைப் பதவி நீக்கம் செய்ய முடியும். இதில் சிறிலங்கா அதிபர் எந்தப் பங்கையும் வகிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment