யாழ். ஊரெழு மடத்துவாசல் சுந்தரபுரி வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவம் நாளை ஞாயிற்றுக்கிழமை(18) சுபநேரமான முற்பகல்- 11 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்தும் பன்னிரண்டு தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும் 24 ஆம் திகதி சனிக்கிழமை இரவு- 08.30 மணிக்கு திருமஞ்சத் திருவிழாவும், 26 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை- 05 மணிக்கு வேட்டைத்திருவிழாவும், 27 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு- 08.30 மணிக்குச் சப்பறத் திருவிழாவும், 28 ஆம் திகதி புதன்கிழமை முற்பகல்- 10 மணிக்குத் தேர்த் திருவிழாவும், அடுத்தமாதம் 01 ஆம் திகதி வியாழக்கிழமை காலை-09 மணிக்குத் தீர்த்தோற்சவமும், அன்றைய தினம் பிற்பகல்-06 மணிக்குக் கொடியிறக்க உற்சவமும் நடைபெறவுள்ளதாக ஆலய நிர்வாக சபை தெரிவித்துள்ளது.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment