சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளை இனம் கண்டு கொள்ளும் வகையில் ஸ்ரிக்கர்கள் ஒட்டும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை(18) முற்பகல் சுன்னாகம் பொலிஸ் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.
சுன்னாகம் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம். செல்வகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கலந்து கொண்டு ஸ்ரிக்கர்கள் ஒட்டும் நிகழ்வை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்வில் சுன்னாகம் பொலிஸ் நிலைய போக்குவரத்துத் துறைப் பொறுப்பதிகாரி, யாழ். மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத் தலைவர் இராசமணி விஜயராஜா, சுன்னாகம் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத் தலைவர் சிவசுப்பிரமணியம் பிரதீபன், செயலாளர் எம். நவலோகராஜா, பொருளாளர் நா. சுந்தரலிங்கம் மற்றும் சங்க உறுப்பினர்கள், சுன்னாகம் முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்திற்குட்பட்ட பகுதி முச்சக்கரவண்டி தரிப்பிடத் தலைவர்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் மற்றும் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
(செய்தித் தொகுப்பு மற்றும் காணொளி:- செல்வநாயகம் ரவிசாந்-)
0 comments:
Post a Comment