வடக்கு மாகாண சபையின் புதிய உறுப்பினர்களாக எஸ்.எம்.எ.நியாஸ், சபாரட்ணம் குகதாஸ் ஆகியோர் இன்றைய தினம் உத்தியோகப்பூர்வமாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
யாழ். கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(27) வடமாகாண சபையின் 117 ஆவது அமர்வு இடம்பெற்றது. குறித்த அமர்வில் கலந்து கொள்ளும் பொருட்டு மேற்படி இரு உறுப்பினர்களும் அவைத் தலைவரினால் சபைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
வடமாகாண சபையின் உறுப்பினராகப் பதவி வகித்த இமானுவேல் ஆர்னோல்ட் யாழ். மாநகர சபையில் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் நோக்குடன் இராஜினாமாச் செய்ததையடுத்து அவருக்குப் பதிலாக ரெலோ கட்சியின் உறுப்பினர் சபாரட்ணம் குகதாசும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸிலிருந்து றயிஸ் பதவிவிலகியதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு எஸ்.எம்..நியாசும் வடக்குமாகாண சபை உறுப்பினர்களாக உள்வாங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
(தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment