//]]>

Tuesday, February 27, 2018

யாழில் கொடிய வட்டிக் கடன் திட்டங்களுக்கு எதிராக மாபெரும் கண்டனப் பேரணி ஆரம்பம்: பெருமளவானோர் பங்கேற்பு(Videos)

கிராமிய உழைப்பைச் சுரண்டும் கொடிய வட்டிக் கடன் திட்டங்களை எதிர்த்து இன்று செவ்வாய்க்கிழமை(27) யாழில் மாபெரும் கண்டனப் பேரணியொன்று  முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர்  தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்டக் கூட்டுறவாளர்களின் ஏற்பாட்டில் இன்று முற்பகல்-10 மணியளவில் யாழ்.நகரிலுள்ள வீரசிங்கம் மண்டபம் முன்பாக ஆரம்பமாகிய குறித்த கண்டனப் பேரணி தற்போது யாழ்.மாவட்டச் செயலகத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதாகவும், இந்தக் கண்டனப் பேரணியில் நீண்ட வரிசையில் கூட்டுறவாளர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டிருப்பதாகவும் எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த கண்டனப் பேரணியைத் தொடர்ந்து கண்டனப் பேரணியைக் குறிக்கும் பதாதைகளுடன் வாகனத் தொடரணி சென்று கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(தமிழின் தோழன்-)



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment