//]]>

Tuesday, February 27, 2018

சிரிய இனப்படுகொலைக்கெதிராக யாழ்.நகரில் கண்டன ஆர்ப்பாட்டம்(Photo)

சிரிய நாட்டில் இடம்பெற்று வரும்   இனப்படுகொலைக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டம் நாளை மறுதினம் வியாழக்கிழமை(01) முற்பகல்-10 மணி முதல் யாழ். நகரிலுள்ள பிரதான பேருந்துத் தரிப்பிட நிலையத்திற்கு முன்பாக நடைபெறவுள்ளது.

'இனப்படுகொலைக்கெதிரான தமிழ்மக்கள்' ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளார்கள். குறித்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று அன்றைய தினம் மாலை-04 மணியளவில் திருகோணமலை சிவன் கோவிலடியிலும் கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடாத்துவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக நம்பகரமான் தகவல்கள் தெரிவித்துள்ளன.
(எஸ்.ரவி-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment