வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவிகளைத் துஸ்பிரயோகங்களிலிருந்து பாதுகாப்பதற்காகத் தற்காப்புக் கலையை எமது மாணவிகளுக்குப் பயிற்றுவிப்பது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
யாழ். குப்பிளான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை(16) மாலை குப்பிளான் வடக்கு கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்திற்கு அருகிலுள்ள விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது. வித்தியாலய முதல்வர் க. காராளசிங்கம் தலைமையில் நடைபெற்ற போது முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
வறுமையிலுள்ள மாணவிகளையும் இந்தத் திட்டத்திற்குள் உள்ளீர்த்து வலுவுள்ளதொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பாக மகளிர் விவகார அமைச்சு என்ற முறையில் நாங்கள் ஆராய்ந்து கொண்டிருக்கின்றோம்.
வடமாகாணத்தில் பெண் மாணவிகள் தூரவிடத்துப் பாடசாலைகளுக்குச் செல்கின்ற போது அவர்கள் பலவிதமான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள். கடந்தகால யுத்தத்திற்குப் பின்னர் எமது மாணவிகளைப் பாதுகாப்பது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
எனவே, தூரவிடத்துப் பாடசாலைகளுக்குச் செல்வதால் எமது மாணவிகள் எதிர்நோக்கும் பாதிப்புக்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டுமாயின் அருகிலிருக்கும் பாடசாலைகளில் அவர்களை அனுமதிப்பது பொருத்தமானதொன்றாக அமையும் என்றார்.
இதேவேளை, வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் குப்பிளான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுநர் போட்டி நிகழ்வில் ஆற்றிய முழுமையான உரையினை இங்கே இணைக்கப்பட்டுள்ள காணொளி(வீடியோ) இணைப்பில் காணலாம்.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment