கனடாவிலிருந்து வருகை தந்திருக்கும் எழுத்தாளர் தேவகாந்தனோடு சந்திப்பும் அவர் அண்மையில் எழுதிய “கலிங்கு” நாவல் பற்றிய அறிமுக நிகழ்வும் 754- கனகராசா வீதி, கிளிநொச்சி திருநகர் வடக்கு எனும் முகவரியில் நாளை திங்கட்கிழமை(19) இடம்பெறவுள்ளது.
எழுத்தாளரும், கிளிநொச்சி சாந்தபுரம் வித்தியாலய அதிபருமான பெரு கணேசன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் கோணேஸ், விமர்சகர் சி.ரமேஸ் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
குறித்த நிகழ்வில் வாசகர்கள், எழுத்தாளர்கள், நண்பர்கள் என அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.
குறித்த நிகழ்வு தொடர்பான மேலதிக விபரங்களுக்கு எழுத்தாளர் கருணாகரனின் 077087168 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்கப்பட்டுள்ளது.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment