மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் சில பகுதிகளில் இன்று சனிக்கிழமை(10) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம், இன்று (10) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ். மாவட்டத்தின் வரணி கரம்பைக் குறிச்சிப் பகுதியிலும்,
காலை- 08 மணி முதல் மாலை-05 மணி வரை முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு, கொக்குத் தொடுவாய், பூதன் வயல், முறிப்பு, தண்ணி முறிப்பு, குமுழமுனை, செம்மலை,கருநாட்டங்கேணி, கொக்கிளாய், குமுழமுனை பலநோக்குக் கூட்டுறவுச் சங்க அரிசி ஆலை ஆகிய பகுதிகளிலும்,
காலை- 08 மணி முதல் மாலை-05 மணி வரை வவுனியா மாவட்டத்தின் பம்பைமடு கிராமம், கற்பகபுரம் கிராமம், அரசமுறிப்புக் கிராமம், பஸார் வீதி, மில் வீதி, சந்தை சுற்றுவட்ட வீதி, ராஜ் மீன்பிடி வலைத் தொழிற்சாலை ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment