//]]>

Friday, March 9, 2018

ஆறுமணிநேர விசாரணையின் பின் முன்னாள் அரசியல்கைதி விடுதலை!

கொழும்பு கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இன்று(09) நண்பகல் கைது செய்யப்பட்ட முன்னாள் தமிழ் அரசியல் கைதி முருகையா கோமகன் இன்று மாலை விடுதலை செய்யப்பட்டார். எனினும், எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு விசாரணைக்கு வருமாறு அவருக்குப்  பணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்குச் செல்ல முற்பட்டபோது விமான நிலையப் பொலிஸாரால் இன்று நண்பகல்- 12 மணியளவில் கைது செய்யப்பட்ட கோமகன் கட்டுநாயக்கா பொலிஸ் நிலையத்தில் ஆறு மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

எதிர்வரும் திங்கட்கிழமை தவறாமல் விசாரணைக்கு சமூகமளிக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் மாலை-06.15 மணியளவில் அவர் விடுவிக்கப்பட்டார்.

இதேவேளை,அவருக்கான பயணத் தடையை நீதிமன்று தளர்த்தியிருந்த போதிலும் அது தொடர்பாக குடியகல்வு குடிவரவுத் திணைக்களத்திற்கு எந்த அறிவித்தல்களும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தே பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(தமிழின் தோழன்-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment