இரண்டு சிறுத்தைக் குட்டிகள் இன்று மாலை தோட்டத்தில் குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில் மரத்திற்கு கீழ் இருப்பதை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கண்டுள்ளனர். இதனையடுத்துக் குறித்த சிறுவர்கள் இது தொடர்பாக அப்பகுதிப் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர்.
பொதுமக்கள் உடனடியாக மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும், திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கும் இது குறித்த தகவல் வழங்கியுள்ளனர்.
அண்மைக்காலமாக மக்கள் நடமாடும் பகுதிகளில் சிறுத்தைகள் சுதந்திரமாக நடமாடி வருவது அவதானிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை குறித்த சிறுத்தைக் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. உயிருடன் மீட்கப்பட்ட சிறுத்தைக் குட்டிகளை அப்பகுதி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(க.கிஷாந்தன்)
0 comments:
Post a Comment