//]]>

Friday, March 9, 2018

திம்புள்ளயில் உயிருடன் பிடிபட்ட சிறுத்தைக்குட்டிகள்!(Photos)


திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தனை கிறேக்லி தோட்டத்தில் இரண்டு சிறுத்தைக்குட்டிகள் இன்று வெள்ளிக்கிழமை(09) மாலை-05 மணியளவில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

இரண்டு சிறுத்தைக் குட்டிகள் இன்று மாலை தோட்டத்தில் குடியிருப்புகள் அமைந்துள்ள பகுதியில் மரத்திற்கு கீழ் இருப்பதை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கண்டுள்ளனர். இதனையடுத்துக் குறித்த சிறுவர்கள் இது தொடர்பாக அப்பகுதிப் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் உடனடியாக மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும், திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கும் இது குறித்த தகவல் வழங்கியுள்ளனர்.
அண்மைக்காலமாக மக்கள் நடமாடும் பகுதிகளில் சிறுத்தைகள் சுதந்திரமாக நடமாடி வருவது அவதானிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை குறித்த சிறுத்தைக் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. உயிருடன் மீட்கப்பட்ட சிறுத்தைக் குட்டிகளை அப்பகுதி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
(க.கிஷாந்தன்)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment