//]]>

Friday, March 9, 2018

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த தொடர்ந்தும் தடை

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த  விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடை இன்றைய தினமும்(09)  அமுலிலிருக்குமென தொலைத்தொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டே தற்காலிக தடை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. 

இதன்பிரகாரம், பேஸ்புக், வட்ஸ்அப், வைபர், இன்ஸ்டரகிராம் ஆகிய சமூக வலைத்தளங்கள் இதில் உள்ளடங்குவதுடன் இது குறித்தான தொடர்ச்சியான  கண்காணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

எவ்வாறாயினும், மாற்று வழிகளைப் பயன்படுத்தி பேஸ்புக், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் ஊடாக இனவாதக் கருத்துக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிடுகின்றவர்கள், பரிமாறுகின்றவர்கள் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவ்வாறானவர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment