//]]>

Saturday, March 10, 2018

கரவெட்டியில் குளத்திலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு(Photo)

யாழ். கரவெட்டியிலுள்ள குளமொன்றிலிருந்து குடும்பஸ்தரொருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை(09) நெல்லியடிப்பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. 

கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியை அண்மித்துள்ள குளம் ஒன்றிலிருந்தே சடலமும், மோட்டார்ச் சைக்கிளும் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளன.

குளத்தில் சடலத்தைப் பார்த்த சிலர் நெல்லியடிப் பொலிஸாருக்கு அறிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகள் மேற்கொண்டனர். குளத்திலிருந்து மீட்கப்பட்டவரின் சடலம் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் மரண விசாரணைகளிற்காக வைக்கப்பட்டுள்ளது.

மோட்டார்ச் சைக்கிளில் பயணித்த போது அவர் குளத்தினுள் தவறி வீழ்ந்து உயிரிழந்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 
கரவெட்டி கிழக்கைச் சேர்ந்த கந்தசாமி சுப்பிரமணியம் (வயது – 56) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

(தமிழின் தோழன்-)




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment