கொழும்பு கொஸ்வத்த பத்தரமுல்லையில் தனியார் பேருந்தொன்றின் சாரதியை தாக்கியமை தொடர்பில் தென் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.கசுன், அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெப் ரக வாகனத்தில் பயணித்த தென்மாகாண சபை உறுப்பினர் எம்.கே.கசும் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கும் குறித்த பேருந்து சாரதிக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறு முற்றியதையடுத்து இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டு குறித்த பெண் பேருந்துச் சாரதியைத் தாக்குவதையும், தென்மாகாண சபை உறுப்பினர் தனது கைகளால் கடுமையாகத் தாக்குவதையும் வேறொருவர் தனது கைத்தொலைபேசியில் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பாகத் தலங்கம பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment