திட்டமிட்டவாறு 'கேரள டயரீஸ்' நூல் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழில் வெளியிடப்படும் எனச் சர்ச்சைக்குள்ளாகியுள்ள குறித்த நூலின் ஆசிரியர் மகாலிங்கம் அருளினியன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
கேரள டயரீஸ்' நூல் நான் கேரள நாட்டுக்குப் பயணித்த போது பெற்றுக் கொண்ட அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல்.
இந்த நூலில் கேரளாவுக்கும், யாழ்ப்பாணத்துக்குமிடையிலுள்ள தொடர்புகள் பற்றி நான்கு கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய கட்டுரைகள் கேரளாவின் தனித்துவங்கள் தொடர்பானவை.
'கேரள டயரீஸ்' என்ற இந்த நூலில் தவறிருந்தால் நூல் வெளியான பின்னர் விவாதிக்கலாம்!, நூலை முழுமையாக வாசித்த பின்னர் உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களையும், விமர்சனங்களையும் முன்வையுங்கள்.
திட்டமிட்டவாறு நான் எழுதிய கேரள டயரீஸ் நூல் இன்று யாழில் வெளியிட்டு வைக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment