யாழ். சுன்னாகம் ஐயனார் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் கழகத்தின் முன்னாள் உறுப்பினரும், துடிப்புள்ள இளைஞருமான ப. கிசோக் ஞாபகார்த்த இரத்ததா ன முகாம் நேற்றுச் சனிக்கிழமை(02) ஐயனார் இளைஞர் கழக மண்டபத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவினரின் அனுசரணையில் இடம்பெற்ற இந்த இரத்த தான முகாமில் 28 பேர் வரையான இளைஞர்கள் ஆர்வத்துடன் இரத்ததானம் வழங்கியதாக ஐயனார் இளைஞர் கழகத் தலைவர் ரவிச்சந்திரன் காமராஜ் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment