//]]>

Wednesday, January 17, 2018

யாழில் கைப்பற்றப்பட்ட ஐந்து கோடி தங்கம்

யாழ். காங்கேசன்துறைக் கடற்பரப்பின் ஊடாக ஏழு கிலோக் கிராம் தங்க பிஸ்கட்டுக்களை சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குக் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் இன்று புதன்கிழமை(17) அதிகாலை இருவர் காங்கேசன்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான இருவரும் யாழ். மாதகல் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறைப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த தங்க பிஸ்கட்டுக்கள் கடற்படையினரின் ரோந்து நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் கடத்திச் செல்லப்படவிருந்த தங்க பிஸ்கட்டுக்களின் மொத்தப் பெறுமதி சுமார் ஐந்து கோடி ரூபா எனக் கணக்கிடப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய கடற்படையின் உதவிப்பணிப்பாளர் ஆர். ஜெயந்த டிசில்வா தெரிவித்துள்ளார்.

('தமிழின் தோழன்')

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment

கட்டுரை

கல்வி

வேலைவாய்ப்பு

மருத்துவம்

தொழிநுட்பம்