கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 2008-2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டே நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகிறது.
இந்தக் கடத்தல்கள் தொடர்பாக முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட அறிந்திருந்தார் என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதவானிடம் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து அட்மிரல் வசந்த கரன்னகொட தொடர்பான முடிவை எதிர்வரும் மார்ச்-08 ஆம் திகதி தமக்கு அறியத் தர வேண்டும் என கோட்டே நீதிவான் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே அட்மிரல் வசந்த கரன்னகொடவைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டுள்ளதாகச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment