தமிழ்த்தேசியக் கூட்டமைப்புத் தற்போதும் அடுத்த தேர்தலை எதிர்கொள்வதற்குத் தயாராகி விட்டது என வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் அ. வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார்.
சர்வதேச மார்க்சியக் குழுவினரின் ஏற்பாட்டில் "ஒரு உற்றறிவுப் பார்வையில் உள்ளுராட்சித் தேர்தலும் பின்னரான போக்கும்" எனும் தலைப்பிலான விசேட அரசியல் கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை(25) பிற்பகல் யாழ். நூலக மண்டபத்தில் நடைபெற்ற போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உள்ளுராட்சி சபைத் தேர்தல் போன்று தமிழ்மக்கள் பிரிந்து நின்று வாக்களிக்க மாட்டார்கள். தங்களுக்கு அமோகமான வெற்றியைப் பெற்றுத் தருவார்கள் எனக் கூட்டமைப்பு நம்பிக்கை கொண்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment