//]]>

Tuesday, February 27, 2018

கிளிநொச்சி, வவுனியாவின் சில பகுதிகளில் நாளை மின்தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் நாளை புதன்கிழமை(28) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாளை காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை கிளிநொச்சி மாவட்டத்தின் விசுவமடு, தேராவில்,  பரந்தன், முரசுமோட்டை, தர்மபுரம், நவஜீவனம் பாம், விசுவமடு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், கோணாவில், ஸ்கந்தபுரம் ஆகிய பகுதிகளிலும்,

காலை- 08 மணி முதல் மாலை-05 மணி வரை வவுனியா மாவட்டத்தின் பதவியா,  சாளம்பைக்குளம் பிரதேசம், சாளம்பைக்குளம் புதிய வீட்டுத் திட்டம் ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment