இது தொடர்பில் அமைப்பின் தலைவர் க. ஆனந்தகுமாரசுவாமி, இணைச் செயலாளர்கள் ச. தனுஜன், அ. சீவரத்தினம் ஆகியோர் இணைந்து இன்று(26) அறிக்கையொன்ற வெளியிட்டுள்ளனர்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அதிகரித்துவரும் மக்களுடைய தேவைகளையும், அவற்றை இலகுவில் நிறைவேற்ற இயலாத நிலையைத் தோற்றுவித்துள்ள வேலையின்மை, போதிய ஊதியமின்மை, விலைவாசி உயர்வு ஆகிய பொருளாதார காரணிகளைப் பயன்படுத்தி மக்களுக்குள் ஊடுருவும் நுண் நிதிசார் எண்ணக்கருவானது உழைக்கும் மக்களைக் கடனாளிகளாக்குகின்றது.
இதனால், தற்கொலைகள், உறவுகளுக்கிடையிலான முரண்பாடுகள் மற்றும் வன்முறைகள் அதிகரிக்கின்றன. கட்டுப்பாடுகள், வரையறைகள் அற்ற, மக்களைத் துன்பத்துக்குள்ளாக்கும் நுண்கடன் திட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாகவும், இத்தகைய கடன் வழங்கும் திட்டங்களை மக்களுக்குப் பாதிப்பற்ற வகையில் கூட்டுறவு அமைப்புகளூடாக மேற்கொள்ள வலியுறுத்தியும் இடம்பெறும் இந்தப் பேரணியில் அனைவரையும் கலந்துகொண்டு சமூக அநீதிக்கு எதிராக குரல்கொடுக்க அணிதிரளுமாறும் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கேட்டுள்ளது.
(தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment