அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று(07) கொழும்பிலுள்ள தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற போது கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவ்வாறு குழப்பகரமான நிலையைத் தோற்றுவிக்கச் செயற்பட்டவர்களில் திகன, தெல்தெனிய மற்றும் கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த எவரும் உள்ளடங்கவில்லை. வெளிப் பிரதேசங்களிலிருந்து பஸ்களில் அழைத்து வரப்பட்டவர்களே சம்பவத்தில் ஈடுபட்டதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இவர்களுக்கெதிராக வெகு விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயல்பட்ட இத்தரப்பினர் பாரபட்சமின்றி தண்டனைக்கு உட்படுத்தப்படுவர்.
சம்பவங்களில் ஈடுபட்டோர் எவராயினும் எந்தவித தராதரமும் பாராது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment