இந்நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் கலந்து கொண்டு உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து உடுவில் மான்ஸ் கல்லூரியின் ஆசிரியையொருவரும் அன்னாரது உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்களான சின்னஞ்சிறுவர்,சிறுமியர் இணைந்து சம்பிரதாயபூர்வமாக கேக் வெட்டியதுடன்,அதன் பின்னர் பிறந்தநாள் கேக்கை ஒருவருக்கொருவர் பரிமாறி மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினருடன், விஜயகுமார் சுலக்சனின் தந்தையார்,சகோதரர்கள், அவரது உறவினர்கள், யாழ். பல்கலைக்கழக மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், ஆர்வலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரிற்கும் கேக் பரிமாறப்பட்டதுடன் தாகசாந்தியும் வழங்கப்பட்டது.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment