//]]>

Thursday, March 8, 2018

உடுவிலில் அணிதிரண்ட மகளிர்!(Video)

யாழ். மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் 2018 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தின விழிப்புணர்வு நிகழ்வு இன்று வியாழக்கிழமை(08) உடுவில் பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

காலை-08 மணியளவில் யாழ். மருதனார்மடம் சந்தியிலிருந்து நடைபவனி ஆரம்பமாகி உடுவில் பிரதேச செயலகத்தினைச் சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் விழிப்புணர்வு நிகழ்வும் இடம்பெற்றது.

யாழ். மாவட்ட மேலதிக  அரசாங்க அதிபர் திருமதி- சுகுணரதி தெய்வேந்திரம் தலைமையில் இடம்பெற்ற  இந்த விழிப்புணர்வு நிகழ்வில் யாழ். பிராந்திய பெண் உப பொலிஸ் பரிசோதகர் திருமதி- சிந்துபாமினி "பெண்களுக்கான பாதுகாப்பும் சட்ட நடவடிக்கைகளும்" எனும் தலைப்பில் உரையாற்றியதுடன், ஐக்கியநாடுகள் வதிவிட பிரதிநிதி அலுவலக கள ஒருங்கிணைவு உத்தியோகத்தர் திருமதி- காயத்திரி குமரன் ஆகியோர் விசேட கருத்துரைகள் நிகழ்த்தினர்.

இந்த நிகழ்வில் உடுவில் பிரதேச செயலர் திருமதி- மதுமதி வசந்தகுமார், பெண்ணியச் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

யூ. என்.எச்.சீ. ஆர் நிறுவனம் மற்றும் யாழ். சமூக செயற்பாட்டு மையம் என்பன குறித்த விழிப்புணர்வு நிகழ்விற்கான நிதி அனுசரணையை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
(எஸ்.ரவி-)



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment