யாழ்ப்பாணம் இணுவில் கந்தசுவாமி கோவில் மஞ்சத் திருவிழா சனிக்கிழமை(10) இரவு வெகு விமரிசையாக இடம்பெற்றது.
குறித்த மஞ்சம் உலகப்பெரு மஞ்சம் எனும் பெருமையையும், நூற்றாண்டு தாண்டிய மஞ்சம் என்கிற பெருமையைக் கொண்டதாகும்.
ஏராளமான அடியார்கள் குறித்த மஞ்சப் பெருவிழாவில் கலந்து சிறப்பித்தனர்.
இரவில் தங்கத்தில் ஜொலித்தது போன்று முருகப் பெருமான் ஆடி அசைந்து வந்த காட்சி அற்புதமாக இருந்தது.
படங்கள்: ஐ.சிவசாந்தன்
0 comments:
Post a Comment