யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை(07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
சட்டம், ஒழுங்கைக் கண்காணிக்கக் கூடியவர்கள் சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பான அமைச்சர்களிற்கு என்னனென்ன விடயங்கள் நடந்தேறுகின்றன என்பது நிச்சயமாகத் தெரிந்திருக்கும்.
இலங்கையில் பல்வேறுபட்ட புலனாய்வுத் துறைகளிருக்கின்றன. அரசாங்கத்திடம் பொலிஸ் சி. ஐ.டி மாத்திரமல்ல அவர்களுக்குள்ளேயே பல புலனாய்வுத் துறைகள் காணப்படுகின்றன. இராணுவத்திடம் புலனாய்வுத் துறையிருக்கிறது. பயங்கரவாதத்திற்கெதிரான புலனாய்வுத் துறை உள்ளிட்ட புலனாய்வுத் துறைகள் இதனுள் அடக்கம்.
இவ்வாறானதொரு சூழலில் இன வன்முறைகளை முன்கூட்டியே கண்டறிந்து நிறுத்த முடியாமைக்கான காரணங்களை ஜனாதிபதி, பிரதமர் போன்றோர் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும்.
இவர்களுக்குத் தெரியாமல் தான் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகிறது எனில் சட்டம், ஒழுங்கு இவர்கள் கைகளில் இல்லையா?, இந்த நாடு எங்கே நோக்கிப் போகிறது போன்ற கேள்விகளும் எழுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
(தமிழின் தோழன்-)
0 comments:
Post a Comment