//]]>

Friday, March 9, 2018

தீவிரமடைகிறது யாழ்.பல்கலைக்கழக ஊழியர் வேலைநிறுத்தப் போராட்டம்!

நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களின் ஊழியர்கள் மேற்கொண்டு வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமை(12) முதல் தீவிரப்படுத்துவதென இன்று வெள்ளிக்கிழமை(09) கொழும்பு திறந்த பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அனைத்துப் பல்கலைக்கழக தொழிற்சங்க கூட்டுக்குழுவின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்திற்கமைய யாழ். பல்கலைக்கழக ஊழியர்களும் தமது வேலைநிறுத்தப் போராட்டத்தை தீவிரப்படுத்தவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் பொருட்டு  எதிர்வரும் திங்கட்கிழமை காலை-08.30 மணிக்குச் சகல போதனைசாரா ஊழியர்களையும் யாழ். பல்கலைக்கழக இராமநாதன் மண்டப முன்றலில் ஒன்றுகூடுமாறு பல்கலைக்கழக ஊழியர்சங்கம் தெரிவித்துள்ளது. 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் வேலை நிறுத்த காலத்தில் பாதிப்புற்றிருக்கும் பல்கலைக்கழகத்திற்குரிய தபால் பட்டுவாடாவை மேற்கொள்ள முன்வந்த நிலையிலும் பதிவாளர் இதற்கு ஒத்துழைப்பு நல்கவில்லையென குற்றஞ்சாட்டுகிறது. சில முக்கியமான சட்ட நடவடிக்கைக் கடிதங்களை தாமதிக்கும் நோக்கிலேயே பதிவாளர் இவ்வாறு நடந்துகொள்கிறார் என ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

(தமிழின் தோழன்-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment