யாழ்.கோப்பாய்க் கோட்டக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் தைப்பொங்கல் விழா நேற்றுச் செவ்வாய்க்கிழமை(17) காலை-09 மணி முதல் புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்தக் கல்லூரியில் யாழ். வலயக் கல்விப் பணிப்பாளர் ந.தெய்வேந்திரராஜா தலைமையில் இடம்பெற்றது.
விழாவில் வடமாகாண சபை உறுப்பினர் அ.பரஞ்சோதி பிரதம விருந்தினராகவும், கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதிமுதல்வர் ச.லலீசன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.
.
இந்த விழாவில் கோப்பாய்க் கோட்டக் கல்விப் பணிப்பாளர் நா.சிவனேசன் வரவேற்புரையையும், புத்தூர் சிவன் தேவஸ்தான பிரதம குரு வண. சோமசுந்தரக் குருக்கள், யாழ். நாக விகாரையின் விகாராதிபதி வண. மீ. சிறீவிமலதேரர், அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி அதிபர் அருட்சகோதரி மரிய ஜீவந்தி, யாழ். ஒஸ்மானியாக் கல்லூரி அதிபர் எம்.எஸ்.எம். அஸ்ரப் ஆகியோர் ஆசியுரைகளையும் நிகழ்த்தினர். யாழ். வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ச.அகிலதாஸ் சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்த விழாவில் கோப்பாய்க் கோட்டக் கல்விப் பணிப்பாளர் நா.சிவனேசன் வரவேற்புரையையும், புத்தூர் சிவன் தேவஸ்தான பிரதம குரு வண. சோமசுந்தரக் குருக்கள், யாழ். நாக விகாரையின் விகாராதிபதி வண. மீ. சிறீவிமலதேரர், அச்சுவேலி புனித தெரேசாள் மகளிர் கல்லூரி அதிபர் அருட்சகோதரி மரிய ஜீவந்தி, யாழ். ஒஸ்மானியாக் கல்லூரி அதிபர் எம்.எஸ்.எம். அஸ்ரப் ஆகியோர் ஆசியுரைகளையும் நிகழ்த்தினர். யாழ். வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ச.அகிலதாஸ் சிறப்புரை நிகழ்த்தினார்.
கோப்பாய் கோட்டப் பாடசாலைகளின் பல்வேறு கலை நிகழ்வுகளும், கிளித்தட்டு, முட்டியுடைத்தல் உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களும் குறித்த விழாவில் மேடையேற்றப்பட்டன.
தமிழ், சிங்கள பாரம்பரியங்களையும், சமய சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்தும் விதத்தில் நிகழ்வுகள் வடிவமைக்கப்பட்டிரு ந்தன. நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லிணக்க நிகழ்ச்சித் திட்டங்களைச் செயற்படுத்தும் நோக்கில் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் நாடு முழுவதிலுமுள்ள 98 கல்வி வலயங்களிலும் இத்தகைய பொங்கல் விழாவை ஏற்பாடு செய்து நடாத்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment