//]]>

Wednesday, January 18, 2017

நாளையுடன் சென்னை புத்தகக் கண்காட்சி நிறைவு


சென்னை புத்தகக் கண்காட்சி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாளையுடன் (19.01.2017) நிறைவுபெற இருக்கிறது இந்தக் கண்காட்சி.

பொங்கல் விழாவையொட்டி தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால், புத்தகப் பிரியர்கள் கண்காட்சியில் திரளாக குவிந்த வண்ணம் இருந்தனர்.







பல்வேறு தலைப்புகளில் 700-க்கும் அதிகமான புத்தக பதிப்பகங்கள் கடை விரித்துள்ளன. வரலாறு, தன்னம்பிக்கை, சினிமா, இலக்கியம், கவிதை, கட்டுரைத் தொகுப்புகள் என நாம் விரும்பும் தலைப்புகளில் ரூ.10 லிருந்து புத்தகங்கள் கிடைக்கின்றன.

கழிப்பறை வசதி, பணம் எடுக்க ஏடிஎம் என பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. நுழைவுக் கட்டணம் ரூ.10.

காவல் துறையும் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகிறது.


தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.

புதுப்புதுப் புத்தகங்கள் தினமும் வெளியிடப்பட்டு வருகின்றன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment