இலங்கையின் சக்தி, மின்சக்தி அமைச்சு புதிதாக செயற்கை மழையைப் பொழிய வைப்பதற்கான திணைக்களமொன்றை உருவாக்கவுள்ளது.
சக்தி, மின்சக்தி பிரதி அமைச்சராகவிருந்த அஜித் பெரேராவை மேற்கொள்காட்டி கொழும்பு ஆங்கில வார இதழ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
நீர்மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டத்தை பேணுவதற்காகவும், வறட்சியின் போது விவசாயத்துறைக்கு பாதுகாப்பு அளிப்பதற்காகவுமே இந்தச் செயற்கை மழைக்கான திணைக்களம் உருவாக்கப்படவுள்ளது.
விமானப்படை, வளிமண்டலவியல் திணைக்களம், இலங்கை மின்சார சபை, நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அதிகாரசபை ஆகியவற்றின் அதிகாரிகள் அடுத்த மாதம் தாய்லாந்துக்குச் சென்று, செயற்கை மழையைப் பொழிவிப்பது தொடர்பான பயிற்சிகளைப் பெறவுள்ளனர்.
ஆண்டுக்கு சராசரி 2000 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி நீர் மின் உற்பத்திக்குப் போதுமானதாக இல்லை. எங்களுக்கு அதிக மழை தேவை. எனவே தான் செயற்கை மழையை உருவாக்குவதற்கான வாய்ப்பை ஆராய்கிறோம என்று இலங்கை மின்சார சபை பணிப்பாளர் சுலக்சன ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment