மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக வடமாகாணத்தின் சில பகுதிகளில் இன்று திங்கட்கிழமையும்(26, நாளை செவ்வாய்க்கிழமையும்(27) மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபையின் வடமாகாணப் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
இதன்பிரகாரம், இன்று திங்கட்கிழமை காலை-08 மணி முதல் மாலை- 05 மணி வரை வடமாகாணத்தில் வவுனியா மாவட்டத்தின் தாண்டிக்குளத்திலிருந்து சின்னவலயங்கட்டு வரை, மறக்கறம்பளையிலிருந்து மணிபுரம் வரை, முள்ளிக்குளம், கீரிசுட்டான், நொதேர்ண் பாம், சாளம்பைக்குளம் பிரதேசம், சாளம்பைக்குளம் புதிய வீட்டுத் திட்டம், அரசமுறிப்புக் கிராமம், ராஜ் மீன்பிடி வலைத் தொழிற்சாலை, ஆசிரியர் தொழிநுட்பக் கல்லூரி, புதுக்குளம் நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகிய பகுதிகளிலும்,
இன்று காலை-09.30 மணி முதல் மாலை-05 மணி வரை மன்னார் மாவட்டத்தின் கீரிசுட்டான், முள்ளிக்குளம், கங்காணிக்குளம், கபீப் சிற்றி ஆகிய பகுதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்குமென அவர் மேலும் கூறியுள்ளார்.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment