//]]>

Monday, February 26, 2018

யாழில் நாளை மாபெரும் கண்டனப் பேரணி

கிராமிய உழைப்பைச் சுரண்டும் கொடிய வட்டிக் கடன் திட்டங்களை எதிர்த்து நாளை செவ்வாய்க்கிழமை(27) யாழில் மாபெரும் கண்டனப் பேரணி இடம்பெறவுள்ளது. யாழ். மாவட்டக் கூட்டுறவாளர்களின் ஏற்பாட்டில் இந்தக் கண்டனப் பேரணி நடாத்தப்படவுள்ளது.

நாளை காலை-09 மணியளவில் யாழ். நகரிலுள்ள வீரசிங்கம் மண்டப முன்றலில் ஆரம்பமாகும் குறித்த கண்டனப் பேரணி யாழ். மாவட்டச் செயலகத்தில் நிறைவடையவுள்ளது.

இந்தக் கண்டன ஏற்பாட்டில் அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.

(எஸ்.ரவி-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment