கிராமிய உழைப்பைச் சுரண்டும் கொடிய வட்டிக் கடன் திட்டங்களை எதிர்த்து நாளை செவ்வாய்க்கிழமை(27) யாழில் மாபெரும் கண்டனப் பேரணி இடம்பெறவுள்ளது. யாழ். மாவட்டக் கூட்டுறவாளர்களின் ஏற்பாட்டில் இந்தக் கண்டனப் பேரணி நடாத்தப்படவுள்ளது.
நாளை காலை-09 மணியளவில் யாழ். நகரிலுள்ள வீரசிங்கம் மண்டப முன்றலில் ஆரம்பமாகும் குறித்த கண்டனப் பேரணி யாழ். மாவட்டச் செயலகத்தில் நிறைவடையவுள்ளது.
இந்தக் கண்டன ஏற்பாட்டில் அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொண்டு ஆதரவு வழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.
(எஸ்.ரவி-)
0 comments:
Post a Comment