//]]>

Monday, February 26, 2018

'உள்ளுராட்சித் தேர்தலும் பின்னரான போக்கும்':யாழில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடல்(Video)

சர்வதேச மார்க்சியக் குழுவினரின் ஏற்பாட்டில் "ஒரு உற்றறிவுப் பார்வையில் உள்ளுராட்சித் தேர்தலும் பின்னரான போக்கும்" எனும் தலைப்பிலான விசேட அரசியல் கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை(25) பிற்பகல்-04 மணி முதல் யாழ். நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.

மேற்படி குழுவின் தலைவர் சொ. சிவபாலன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் ஓய்வுநிலைக் கல்வி அதிகாரி ஏ.சி.ஜோர்ஜ் ஆரம்ப உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து திறந்த கலந்துரையாடலும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ஒன்றிணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களின் முன்னாள் முதலமைச்சர் அ. வரதராஜப்பெருமாள் மற்றும் கல்வியியலாளர்கள், அரசியல் அவதானிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், புத்திஜீவிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலில் நடந்து முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ்மக்களின் அதிருப்தி, உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்குப் பின்னரான அரசியல் சூழல்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.
(எஸ்.ரவி-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment