//]]>

Monday, February 26, 2018

யாழில் ஆவா குழுத் தலைவனின் சகாவை மடக்கிப் பிடித்த பொலிஸார்

யாழ். மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஆவா குழுவின் தலைவன் சன்னாவின் சகாவை  மானிப்பாய்ப் பொலிஸார் நேற்றைய தினம்(25) மடக்கிப் பிடித்துள்ளனர்.

மானிப்பாய்ப் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்துக் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டுத் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகப் பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

(தமிழின் தோழன்-)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment