//]]>

Sunday, March 11, 2018

இலங்கையில் முடக்கப்பட்ட சமூக வலைத்தளங்கள்:வெளியானது புதிய தகவல்!

அவசரகாலச்சட்டம் நீக்கப்படும் வரை இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மீதான தடை நீடிக்கும் என அரசாங்க வட்டாரங்களை மேற்கொள்காட்டி கொழும்பு ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் இனப்பதற்றம் தீவிரமடைந்ததையடுத்துக் கடந்தவாரம் சமூக வலைத்தளங்களை அரசாங்கம் முடக்கியத்துடன் இந்தத்  தற்காலிகத் தடை 72 மணித்தியாலங்கள் வரை நீடிக்குமெனத் தெரிவித்திருந்தது. எனினும், இந்த தடை மேலும் நீடிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் ஜனாதிபதியின் செயலாளரும், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணையத்தின் தலைவருமான ஒஸ்ரின் பெர்னாண்டோ கருத்துத் தெரிவிக்கையில்,

சமூக வலைத்தளங்கள் மீதான தடை எப்போது நீக்கப்படும் என என்னால் தற்போது கூற முடியாது. அது நிலைமைகளைப் பொறுத்த விடயம்.

இதேவேளை,அவசர காலச்சட்டத்தின் கீழேயே சமூக வலைத்தளங்கள் மீதான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அவசரகாலச்சட்டம் நீக்கப்படும் வரை தொடரும் வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் மூத்த சட்டத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

0 comments:

Post a Comment