தமிழக முதல்வர் செல்வி- ஜெயலலிதாவின் மறைவு எம் அனைவருக்கும் மிகுந்த துயரையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது அவருடைய இழப்புத் தமிழ்நாட்டின் மக்களுக்கு மாத்திரமல்ல இலங்கைத் தமிழர்களுக்கும் மிகப் பெரும் இழப்பாகும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
ஆண் ஆதிக்க அரசியலில் ஒரு பெண்ணாகத் துணிச்சலுடனும், நேர்மையுடனும் செயற்பட்டு இன்று தனக்கென ஒரு முத்திரையைத் தமிழ் நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பதித்துள்ளார்.
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அவர் மிகத் தீவிரமாகத் தமிழ்நாட்டின் சட்ட சபையில் தீர்மானங்களைக் கொண்டு வந்ததுடன் மாத்திரமன்றி மத்திய அரசுக்கும் தொடர்ச்சியான அழுத்தங்களைக் கொடுத்து வந்தார் என்றார்.
0 comments:
Post a Comment