ராஜீவ் காந்தி கொலையாளிகளைத் தானும், தனது சகோதரி பிரியங்காவும் முழுமையாக மன்னித்து விட்டதாக ராஜீவ் காந்தியின் மகனும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மலேசியா சென்றுள்ள ராகுல் காந்தி கோலாலம்பூரில் நேற்றுச் சனிக்கிழமை(10) அங்கு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துரையாடல் நேரத்தில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாங்கள் பல ஆண்டுகளாக வருத்தப்பட்டுக் கொண்டிருந்தோம். அது எம்மைப் பாதித்தது. நாங்கள் மிகவும் கோபமாக இருந்தோம். ஆனால், எப்படியோ அதனை முற்றிலும் மன்னித்து விட்டோம்.
பிரபாகரன் இறந்து கிடப்பதைத் தொலைக்காட்சியில் பார்த்த போது எனக்குள் இரு உணர்வுகள் எழுந்தன. ஏன் இந்த மனிதனை அவர்கள் இப்படி இழிவுபடுத்துகிறார்கள் என்பது முதலாவது, இரண்டாவதாக அது அவருக்கும், அவரது பிள்ளைகளுக்கும் உண்மையில் கெட்டது என உணர்ந்தேன்.
இந்த அனுபவத்திலிருந்து வந்த நாம் அதனைப் புரிந்து கொள்கிறோம் எனவும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment